அரசமைப்புச்சட்டத்திற்கு விரோத மான முறையில் இங்கே தாக்கல் செய்யப்பட்டிருக்கிற ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை கடுமை யாக எதிர்க்கிறோம். நம் அரசமைப்புச் சட்டம் மற்றும் நம் ஜனநாயகத்தின் மாண்புகள் படுகொலை செய்யப்படுவதற்குச் சாட்சியமாக இருந்து கொண்டிருக்கிறோம். நம் நாட்டின் மதச்சார்பின்மை வலைப் பின்னல் கேள்விக் குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. 32 வரிகளே கொண்ட ஒரு தீர்மா னத்தின் மூலம் இந்த அரசு ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தைக் கொன்றிருக்கி றது. அசாதாரணமான சூழ்நிலை அம்மாநிலத்தில் நிலவிக் கொண்டிருக் கிறது. ஜம்மு-காஷ்மீர் என்ற மாநிலமே இனி கிடையாது. அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப் பட்டிருக்கிறார்கள். இந்தச் சட்டமுன் வடிவை அம்மாநில மக்கள் ஏற்றுக் கொண் டிருப்பதாக அரசாங்கம் கூறிக் கொண்டி ருக்கிறது. அது உண்மையாயின், ஏன் 35 ஆயிரம் துருப்புகளை அம்மாநிலத்திற்கு அனுப்பி இருக்கிறீர்கள்? எங்கள் கட்சித் தலைவர் முகமது யூசுப் தாரிகாமி உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களைக் கைது செய்து ஏன் வீட்டுக்காவலில் வைத்தி ருக்கிறீர்கள்?
இந்தச் சட்டமுன்வடிவை சில மாநிலக் கட்சிகள் ஆதரித்துக் கொண்டிருக்கின்றன. இதுபோன்ற நிலைமை தமிழ்நாடு, ஒடிசா, ஆந்திரா மற்றும் வேறெந்த மாநிலத் திற்கும் ஏற்படலாம். பாஸ்டர் நிமோலர் (Pastor Niemoller) அவர்கள் கூறிய பொருள்பொதிந்த ஒருசில வாக்கியங்களைப் படிக்க விரும்பு கிறேன். அவர் கூறினார்: “முதலில் அவர்கள் சோசலிஸ்ட்டுகளிடம் வந்தார்கள். நான் எதுவும் பேசவில்லை. ஏனெனில் நான் ஒரு சோசலிஸ்ட் கிடையாது. பின்னர் அவர்கள் தொழிற்சங்க வாதிகளிடம் வந்தார் கள். நான் எதுவும் பேசவில்லை. ஏனெனில் நான் ஒரு தொழிற்சங்கவாதி கிடையாது. பின்னர் அவர்கள் யூதர்களிடம் வந்தார்கள். நான் எதுவும் பேசவில்லை. ஏனெனில் நான் ஒரு யூதன் கிடையாது. பின்னர் அவர்கள் என்னிடம் வந்தார்கள், அப்போது எனக்காகப் பேச யாருமே இல்லை.” நம் நாட்டிலும் நிலைமைகள் இந்தத் திசைவழியில்தான் சென்று கொண்டிருக் கின்றன. நம் அரசமைப்புச்சட்டம் அச்சுறுத்த லுக்கு உள்ளாகி இருக்கிறது. பாசிச இந்து ராஷ்டிர சித்தாந்தத்தைப் பின்பற்றிடும் ஒரு கட்சியிடமிருந்து வேறெதை எதிர்பார்க்க முடியும்? அவர்கள் பாசிச, நாஜிச மற்றும் ஹிட்லரின் சித்தாந்தத்தைப் பின்பற்று கிறார்கள்.
ஜம்மு – காஷ்மீர் மக்கள் ஒருவித மாக நம்மிடமிருந்து அந்நியப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். அவர்கள் அந்நியப் படுத்தப்படுவதைத் தடுக்க வேண்டியது ஆட்சியாளர்களின் பொறுப்பாகும். உள்துறை அமைச்சர் அங்குள்ள அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப் படும் என்று உறுதிமொழி அளித்திருந்தார். இந்த அரசாங்கம் ஏன் அதனைச் செய்திட வில்லை? நமக்கு இந்தியாவுக்குள் ஒரு பாலஸ் தீனம் தேவையில்லை. நமக்கு மக்கள் தேவை. காஷ்மீர் நம் நாட்டின் பிரிக்கமுடி யாத பகுதி என்பதில் ஐயமில்லை. அதே போல், காஷ்மீர் மக்களும் உணரக்கூடிய விதத்தில் இருந்திட வேண்டும்.
(மாநிலங்களவையில் திங்கள் அன்று “ஜம்மு-காஷ்மீர் மாநில மசோதா 2019”-ன் மீது நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கே.கே.ராகேஷ் பேசியதிலிருந்து....)